Friday, October 30, 2009

புன்னகை

7 கருத்துக்கள்


வலிகளுக்குள்ளும்
ஏன்
புன்னகைக்க கற்று கொண்டாய்!!
எம் உணர்வுகளை உலகம்
ஏற்றுக் கொள்ள
எப்போதும்
தயாராக இருந்ததே இல்லை….
உன் கண்களில் தெரியும் வலியை
கண்டுபிடிக்க
மனிதாபிமானத்தில்
இன்னமும் இயந்தியரம்
உருவாக்கப்படவில்லை……
வெறுமனே
மேலிழுத்து விடப்பட்ட - இந்த
வாயிலின் நாடா
எப்போதும் மூடப்படலாம்…….
இது தான் - என்
இறுதிப் புன்னகையாக கூட இருக்கலாம் -என
உன் இறுக்கி கொள்ளும்
கரங்கள் கூறுவது
எனக்கு மட்டும் தான் தெரியும்….
மேற்கத்தைய விஞ்ஞானம்
இதை புரிந்து கொள்ள
பல காலம் எடுக்கலாம்….


கண்ணீரும் வற்றிப்போய்
கனவுகளும் செத்துப்போய்
எஞ்சிக்கிடப்பது இது மட்டுமே – என
சொல்லும்
உன் புன்னகையின் அர்த்தம்
எவருக்கு புரியும்!!!!!!

மா.குருபரன்
30-10-09




7 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க